Saturday 8 September 2012

80+ வயதிலும் ஒரு அழகு

சமர்ப்பணம் :





' கிளாசிற்கு போய்  15 நாள் ஆகிறது , என்னவெல்லாம் மிஸ் பண்ணேனோ தெரியலையே ,

'பரவாயில்லை , உடம்பு  சரியில்லாததனாலே தானே லீவ் எடுத்தது, ஈஸியா பிக்  அப் செய்துக்கலாம்,'

'ரொம்ப பயமா இருக்கு , டீச்சர் என்ன சொல்லுவாளோ  தெரியலையே '

'கவலைபடவேண்டாம் நான் வந்து சொல்லறேன் '.

இ தில் கிளாசிற்கு போகாமல் பயந்தது என் அன்பிற்குரிய அம்மா , 80+

பதில் சொன்னது நான் .

ஆச்சர்யமாக இருக்கிறது தானே!

ஆனால் இது உண்மைதான் .

என் அம்மா மிகவும் சுறுசுறுப்பான பேர்வழி . காலையில் இன்றும் 5.30 மணிக்கு எழுந்து குளித்து பூஜை மற்றும் சிறு சிறு தன்னால் முடிந்த வேலைகளை செய்து துவிட்டு பின் பக்கத்துக்கு ரோடில் இருக்கும் பாகவத  கிளாஸ் மதியம் 1.30 மணிநேரம் சென்றுவிட்டு , வீட்டிக்கு வந்து சிறிது ரெஸ்ட் எடுத்ததுகொண்டு பின் மீண்டும் மிக  அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று விஷ்ணு சஹாஸ்ரநாமம் சொல்லிவிட்டு பின் சில தமிழ் சீரியல் தொலைக்கட்சியில் பார்த்துவிட்டு பின் ரெஸ்ட் .

இப்படி  தனக்குத்தானே ஒரு routine  வைத்துக்கொண்டு  எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் என் அன்னை ஒரு அதிசயபிறவிதான் . எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் வீட்டு  வேலைகள் செய்துகொண்டு  குடும்பம் , வீடு என்று இருந்தவர், என் தந்தையின் மறைவிற்கு பின் , கடமைகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில் , தனக்கு பிடித்தமான ஸ்லோக கிளாஸ் செல்லும் வழியில் 80 வயதிற்கு மேல் ஆரம்பித்து இன்று மிகவும் அனைவருக்கும் பிடித்தமான செல்ல student  ஆக என் அன்னை விளங்குகிறார் .

இந்த அழகான வாழ்க்கைக்கு தேவையான உள்ளதையும் , ஆரோக்யத்தையும் கொடுத்த அந்த இறைவனுக்கு என் உள்ளார்ந்த  , நெஞ்சார்ந்த நன்றி. எனக்கு , சுறுசுறுப்பிற்கும் , சிரித்த முகத்திற்கும் உதாரணமாக விளங்கும என் அன்னையே உங்களுக்கு என் salute.

15 நாட்கள் உடம்பு சுகமில்லாமலிரிந்து இன்று மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் நாராயணீயம் மற்றும் விஷ்ணுசஹரநாமம்  வகுப்பிற்கு  5 வயது பிள்ளையின்  உற்சாகத்துடன் செல்ல அரம்பித்திற்கும்  என் அன்னை  ஒரு அபூர்வபிறவிதான் . அதனால் தானோ என்னவோ என்றும் இளமையுடன், தினம் தினம் முக அழகு ஜொலிப்பது போல் இருக்கிறது என் அன்னைக்கு.