Saturday 7 July 2012

தண்ணீரும் கூந்தலும்


 கூந்தல் பராமரிப்பு என்றவுடன் எனக்கு முதலில் நினைவில் வருவது 'தண்ணீர்''
இப்பொழுது வெவ்வவேறு தண்ணீர் நாம் தினப்போழுதில் உபயோகிக்கின்றோம்  . போர் தண்ணீர், கிணற்று தண்ணீர் , corporation water மற்றும் பல . ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடையது. நீரில் உப்பு இருந்தால் முடி கொட்டும்.. chemical கலந்திருந்ததால்   பளபளப்புதன்மை குறையும். தண்ணீர் கிடைக்காத இந்த காலத்தில் இருக்கும் நீரை உபயோகப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம் . இந்த நிலையில் நாம் நம் முடி பராமரிக்கும் முறையில் கடைபிடிக்கவேண்டிய நியதிகளைபார்ப்போம்  .

1. போர் தண்ணீரில் கடினத்தன்மை இருக்கும் , அதனால் இங்கு வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்தவேண்டும்  .
2.போர் thanneeraha இருந்ததால் முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவி பின் சீயக்காய் அல்லது மென்மையான (without much lather ) இல்லாத ஷாம்பூ உபயோகிக்கவும் .
3.கடைசி mug மினரல் தண்ணீர் விட்டுகுளிப்பது .நலம்
4.2 துளி எலுமிச்சை சாறு அல்லது இருமுறை கொதித்து ஆறிய டீ தண்ணீரை ஒரு mug மினரல் தண்ணீரில் கலந்து அதை கடைசியாக  விட்டுக்கொள்ளவும் .

கிணற்று தண்ணீர் என்றால்
1. இதில்  உப்பு அதிகம் . முடி நிறையவே கொட்டும், அதனால் நல்ல தரமான வீட்டில் தயாரித்த herbal oil நிறைய தலையில் தடவி நன்கு ஊறியபின் நல்ல சீயக்காய் கொண்டு முடி அலசவேண்டும் .
2. சீயக்காயிற்கு இந்த கிணற்று நீரில் எண்ணெய் போகாது அதனால் ஒருமுறை நன்கு தேய்த்து அலசியபின் மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும்..இல்லையென்றால் சிறிது தரமான ஹெர்பல் ஷாம்பூ உபயோகிக்கலாம்  .எண்ணெய் நிறைய தடவவேண்டியது அவசியம்..
3.குளித்தவுடன் தண்ணீர் போக  தவுட்டிவிடவேண்டும்..
4. இங்கும் கடைசி mug எலுமிச்சை சாரு அல்லது டீ தண்ணீர் விட்டு அலசலாம் .

corporation water:
இதில் க்ளோரின் கலந்திருப்பதால் முடி dry ஆகும். இங்கும்  நாம் எண்ணெய் அதிகம் தடவி ஊறி குளித்தல் நலம்.. வாரம் 3 முறை தலை அலசலாம் .இங்கு முடி பிரவுன் நிறத்திற்கு விரைவில் மாறி பின் விரைவில் நரைத்துவிடும்..
நல்ல தரமான எண்ணெய் மிக மிக அவசியம்..

leave on chemical conditionr தவிர்ப்பது நலம் ஏனென்றால் இதில் ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் முடி மெல்லியதாக ஆகிவிடும்  விரைவில் ..எப்பொழுதும் எலுமிச்சை சாறு அல்லது டீ  தண்ணீர் conditioner உபயோஹிப்பது நலம்..

தரமான எண்ணெய் தயாரிக்கும் முறை அடுத்த பதிவில்..

குறிப்பு : டீ தண்ணீர் எப்பொழுதும் உபயோகப்படுத்திய டீ தண்ணீரை மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டி பின் ஆறவைத்து உபயோகிகவும்..(boil used tea water  for the second time)


6 comments:

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    //2. சீயக்கயிற்கு இந்த கிணற்று நீரில் எண்ணெய் போகாது அதனால் ஒருமுறை நான்கு தேய்த்து அலசியபின் மீண்டும் ஒருமுறை தேயக்கவேண்டும்..இல்லையென்றால் சிறிது தரமான ஹெர்பல் ஷாம்பூ உபயோஹிக்கலம் .//

    சீயக்கயிற்கு = சீ ய க் கா ய் க் கு

    நான்கு = ந ன் கு

    உபயோஹிக்கலம் = உ ப யோ கி க் க லா ம்

    //ஏனென்றால் இதில் ஆல்கஹால் சேர்ந்திருப்பதால் முடி மெல்லியதஹ ஆகிவிடும் விரைவில் ..எப்பொழுதும் எல்லுமிசை சாறு அல்லது டீ தண்ணீர் conditioner உபயோஹிப்பது நலம்.//

    மெல்லியதஹ = மெ ல் லி ய தா க

    எல்லுமிசை = எ லு மி ச் சை

    //3.குளித்தவுடன் தண்ணீர் போஹ தவுட்டிவிடவேண்டும்..
    4. இங்கும் கடைசி mug எலுமிச்சை சாரு அல்லது டி தண்ணீர் விட்டு அலசலாம்.//

    போஹ = போ க

    சாரு = சா று

    டி = டீ

    உபயோஹிக்கின்றோம் = உபயோகிக்கின்றோம்.


    முடிந்தால் ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்து கொள்ளவும். அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா . மிக கவனமாக என் பதிவை படித்து அதை நேர்த்தியாக பிழை சரி செய்து திருத்தியதற்கு நான் என் பணிவான நன்றியை கூறிக்கொள்கிறேன் . திருத்தி அமைக்கப்பட்ட பதிவு இப்போழுது தாங்கள் காண்பது.இனி , எழுத்து பிழையில்லாமல்,நேர்த்தியாக எழுதுவதற்கு பழகிக்கொள்கிறேன் .மீண்டும் என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. த்ங்கள் பதிவின் பெயரோ “அழகே உன்னை ஆராதிக்கிறேன்” என்பது.

    அதில் எழுத்துப்பிழை அதிகமாக இல்லாமல் இருந்தால் தானே இன்னும் அழகுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்!

    அதனால் சிலவற்றை தயக்கத்துடன் தான் குறிப்பிட்டு இருந்தேன்.

    அதை தவறாக நினைக்காமல், தாங்கள் பாஸிடிவ் ஆக எடுத்துக்கொண்டு, சரி செய்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk

    ReplyDelete
  3. எலும்பிச்சை ப்ளீச்சிங் குணம் உள்ளது என்கிறார்களே அதை தலைமுடிக்கு பயன்படுத்தலாமா...? ஒ..... தலைக்கு குளிக்க மினரல் வாட்டரா என் தல இதை படித்தால் அவ்வளவு தான்.. :)))

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய கருத்து சரியே .எலுமிச்சை சாறை அப்படியே உபயோகிக்கக்கூடாது . இரண்டு துளிகள் 1/2 mug தண்ணீரில் விட்டு dilute செய்து பின் உபயோகிக்கவேண்டும் அப்பொழுது அதன் ப்ளீசிங் குணம் மறைந்து அழுக்கை எடுத்து அதனோடு கூட பளபளப்புதன்மையை சேர்க்கும் குணமாக ஆகிவிடுகிறது.. இப்படிதான் நம் நகங்களுக்கு, உபயோகித்த எலுமிச்சை தோலியை polish போல் தேய்ககலாம் .அது நன்கு அழுக்கை அகற்றி பின் பளபளப்பைகொடுக்கும்.

      Delete
  4. பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete